என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பிரியாணி கடைக்காரர் கொலை
நீங்கள் தேடியது "பிரியாணி கடைக்காரர் கொலை"
தண்டையார்பேட்டையில் பிரியாணி கடைக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
தண்டையார்பேட்டை, திலகர் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவி (வயது41). திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தள்ளு வண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்தார்.
நேற்று மதியம் அவர் பிரியாணி சமைக்க தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தார். தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே வந்தபோது 3 பேர் கும்பல் ரவியை வழிமறித்து வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக காஞ்சீபுரத்தில் பதுங்கி இருந்த தண்டையார்பேட்டை திலகர் நகரைச் சேர்ந்தவர் ரவுடி ரேடியோ விஜி, புளியந்தோப்பைச் சேர்ந்த ராம்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவியின் பிரியாணி கடையில் ரவுடி ரேடியோ விஜி சாப்பிட்டு விட்டு அதற்கான பணத்தை கொடுக்கவில்லை. மேலும் ரவியிடம் மாமூல் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.
இதுபற்றி ரவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ரவுடி விஜியை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர்.
இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி விஜி, போலீசில் சிக்க வைத்த ரவியை கூட்டாளிகளுடன் சேர்ந்து தீர்த்து கட்டி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கொலை தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
தண்டையார்பேட்டை, திலகர் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவி (வயது41). திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தள்ளு வண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்தார்.
நேற்று மதியம் அவர் பிரியாணி சமைக்க தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தார். தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே வந்தபோது 3 பேர் கும்பல் ரவியை வழிமறித்து வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக காஞ்சீபுரத்தில் பதுங்கி இருந்த தண்டையார்பேட்டை திலகர் நகரைச் சேர்ந்தவர் ரவுடி ரேடியோ விஜி, புளியந்தோப்பைச் சேர்ந்த ராம்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவியின் பிரியாணி கடையில் ரவுடி ரேடியோ விஜி சாப்பிட்டு விட்டு அதற்கான பணத்தை கொடுக்கவில்லை. மேலும் ரவியிடம் மாமூல் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.
இதுபற்றி ரவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ரவுடி விஜியை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர்.
இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி விஜி, போலீசில் சிக்க வைத்த ரவியை கூட்டாளிகளுடன் சேர்ந்து தீர்த்து கட்டி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கொலை தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X